NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகிலேயே முதன்முறையாக டெங்கு தடுப்பூசி!

உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஏ.டி.எஸ். நுளம்புகளால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து, மக்களை பாதுகாப்புக்காக பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles