NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை செயற்பாடுகள் பாதிப்பு!

வைத்தியசாலையில் இருந்த ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதால் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் அவர் வைத்தியசாலையை விட்டு சென்றுள்ளதாக எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாகக் குழுவின் பிரதம அமைப்பாளர் ஆர்.எஸ். குணசேன தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த மயக்க மருந்து நிபுணர் மீண்டும் பணிக்கு வரமாட்டார் என அவரின் தந்தை வட்ஸ்அப் செய்தி மூலம் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் உள்ள மயக்க மருந்து நிபுணர் வெளியேறியதால் இரண்டு அறுவை சிகிச்சை பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் பணிகள் என்பன முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்கள் கராப்பிட்டிய மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles