NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எல்பிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு…!

எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் உள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட குடும்பம் நேற்று வாடகை அடிப்படையில் அவ் வீட்டில் வசிக்க வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது வீட்டின் காணியில் உள்ள சிறிய கிணற்றில் சிறுவன் விழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles