NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து – 30 பேர் பலி!

ஏமனின் ஏடனில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த படகு ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவிலிருந்து ஏடனின் கிழக்கே பகுதியை நோக்கிய பயணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

படகிலிருந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என 78 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது.

மேலும் 100 பேர் காணாமற்போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடம் மாத்திரம் 97,000 புலம்பெயர்ந்தோர் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவிலிருந்து யேமனுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles