NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடன் தொல்லையால் பட்டதாரி மாணவன் எடுத்த விபரீத முடிவு…!

முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழப்பதற்கு முன்னர் கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Share:

Related Articles