NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டிப்பிடித்தால் இவ்வளவு நன்மைகளா?

கட்டியணைப்பது என்பது இரண்டு நபர்களின் இதயங்கள் இணைவதுபோன்றது. ஒரு சில நொடிகளே மேற்கொள்ளப்படும் இந்த செயலினால் மனதளவில் மாற்றங்கள் நிகழ்கிறது. 

அணைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து அறிவியல் ஆராய்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரவணைத்தல், ஆரத் தழுவுதல், தொடுதல் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியான உணர்வுகள் வெளிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 முறையாவது அணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

இதய நலனுக்கு நல்லது  : ஆரத் தழுவும்போது நம் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதுதொடர்பாக அமெரிக்காவின் கரோலினா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தங்கள் பார்ட்னரை கட்டி அணைக்காத நபர்களுக்கு நிமிடத்திற்கு இதயத்தில் 10 துடிப்புகள் கூடுதலாக இருப்பதும், பார்ட்னரை கட்டியணைக்கும் நபர்களுக்கு இதயத்தில் 5 துடிப்புகள் மட்டுமே அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.

இயல்பாக ஸ்ட்ரெஸ் குறையும் : உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது அல்லது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது என்றால், அந்த சமயத்தில், மனதிற்கு பிடித்த நபரை அணைப்பதால் அனைத்தும் மறந்து மனம் இலகுவாகும். அணைக்கும்போது உடலில் சுரக்கும் கார்டிஸால் அளவுகள் நமது பதற்றத்தை குறைக்குமாம்.

குழந்தைகளை அணைக்கலாம் : பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் குழந்தையுடன் தொடுதல் உணர்வை கடைபிடிக்க வேண்டும். வளர்ந்த பிறகு பிறருடனான பந்தத்தை குழந்தைகள் அதிகரித்துக் கொள்ள இது உதவும். ஆதரவற்றோர் இல்லங்களில் அணைப்பு இல்லாமல் வளருகின்ற குழந்தைகள், பெற்றோரின் அணைப்பில் வளரும் குழந்தைகளை காட்டிலும் மனதளவில் தளர்ச்சி அடைந்தவர்களாக, தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருக்கின்றனர்.

அணைப்பு பெரியவர்களுக்கும் முக்கியமானது : பெரியவர்களுக்கும் கூட அணைப்பு என்பது முக்கியமான நடவடிக்கை ஆகும். இது தனிமை உணர்ச்சியை போக்கும். நாளொன்றுக்கு ஒருசில முறை அணைப்பவர்களுக்கு புத்துணர்ச்சி, உத்வேகம் போன்றவை கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மன அழுத்தம் மிகப் பெரிய அளவில் குறைகிறதாம்.

சிந்தனையை ஊக்குவிக்கும் : அணைக்கும்போது நம் மனதில் எச்சரிக்கை உணர்வு, ஒருங்கிணைந்த எண்ணம், சிந்தனை போன்றவை மேம்படும். அணைப்பு என்பது தியானத்திற்கு ஈடானது. இது நம் மனதில் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும். அரவணைப்பதால் நம் தசைகளில் மீட்டுருவாக்கம் நடக்குமாம். நம்மை இளமையானவராக காட்டுமாம்.

பயத்தை குறைக்கும் : அச்சம், தன்னம்பிக்கை போன்றவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு மனிதர்களுக்கு இடையே அணைப்பு ஏற்படும்போது அச்சம் குறைகிறது என்றும், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சம் 20 நொடிகளுக்கு நீங்கள் அணைக்கும்போது மகிழ்ச்சிக்குரிய ஆக்ஸிடைசின் ஹார்மோனின் சுரப்பு உடலில் அதிகரிக்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles