(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ரு{ஹனு கதிர்காமம் ஆலயத்தின் அசல பெரஹெர மூன்றாவது நாளாக இன்று (21) வீதி உலா தொடரும் என பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி ஆரம்பமான இந்த ஊர்வலம் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதேவேளை கதிர்காமம் பெரஹெராவிற்கு கதிர்காமம், கிரிந்த மற்றும் தங்காலை பிரதேசங்களுக்கு அதிகளவான வெளிநாட்டு யாத்திரிகர்கள் வருகை தருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடற்கரை மற்றும் டைவிங் மேற்கொள்ளும் இடங்களிலும் 40க்கும் மேற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகளவு பயன்படுத்தப்படும் ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைச் சுற்றி விசேட படகுச் சேவையைப் பயன்படுத்தி கண்காணிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூஜை நகருக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் சிறப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.