வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம எசல பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம், நேற்று சனிக்கிழமை இரவு பெரஹெரா ஆரம்பமான சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளது
அதன்போது , யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் பீதியில் ஓடியதால் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பார்வையாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.