NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்லூரிக்குள் புகுந்து கணினிகளை திருடி விற்பனை செய்த மாணவர்கள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நன்னெரியாவில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் கணித ஆய்வு கூடத்தை உடைத்து பொருட்களை திருடிய மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாணவர்கள் கணித அறையின் ஜன்னலை உடைத்து 7 டெப்லட்கள் மற்றும் கணினிகளை திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்கள் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles