NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலை எதிர்பார்த்து வந்த இளைஞனுக்கு காதலியின் வீட்டில் கிடைத்த விருந்து!

கட்டுகஸ்தோட்டை பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டையில் வசிக்கும் காதலர்கள் இருவரையும் பெண்ணின் உறவினர்கள் அழைத்துச்சென்று பெண்ணின் வீட்டில் வைத்து இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டு அந்த இளைஞனை அவரின் வீட்டிலும் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவரின் உறவினர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய, யுவதியின் தந்தை, தாய், மற்றும் உறவினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles