கம்பஹா – எடேரமுல்ல பகுதியில், புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புகையிரத கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (8.6.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,விபத்து காரணமாக பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவை தாமதமாகலாம் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.