NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்து கொடுத்த விஷமிகள் !

கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம், உழவனூர் பகுதியில் நேற்றை தினம் காலை இருவீட்டாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles