NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குறைந்த வருமானம் கொண்ட  குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் ஒரு பகுதி வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இவ்வாறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 8,793 மில்லியன் ரூபாய் பணம் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.  

குறித்த தொகை பதிவு செய்யப்பட்ட 1,410,064 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles