NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குவைட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கை பணிப்பெண்கள்!

வீசா இன்றி குவைட்டில்சட்டவிரோதமாக தங்கியிருந்து குவைட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000 க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வருவதோடு, எஞ்சிய குழுவினரும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 இது தொடர்பாக குவைட்டின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகைளை இரத்து செய்துள்ளனர்.

அத்துடன், விமானப் பயணச்சீட்டு இல்லாத இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles