NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர்.

இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles