NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் கொலை – விசாரணையில் வெளியான தகவல்!

நுவரெலியா – மதுரட்ட கலபட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) உயிரிழந்த நபரின் மனைவி பொசன் போயாவை முன்னிட்டு விகாரைக்கு சென்றிருந்த வேளையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கவீட்டின் கதவு மற்றும் ஜன்னல் திறந்து கிடப்பதால் சந்தேகமடைந்த அயலவர், உயிரிழந்தவரின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவரது முகம் மற்றும் கைகால்கள் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டதுடன், பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles