NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிக்கு நிதி கிடைக்காததால் காலவரையறையின்றி அகழ்வுப்பணிகள் ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக நிபுணர்களால் கோரப்பட்ட நிதிக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காத நிலையில் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னதாகவே கொடுக்கப்பட்ட நிதித் தொகையில் நீதி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 07 வீதம் இதற்கென செலவிட வேண்டியுள்ளமையால் மீள் பரிசீலனை செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சு கோரியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன் பின்னரே அமைச்சினால் இதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles