NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொலைக்குற்றச் செயலுக்காக நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு!

பலப்பிட்டி மேல் நீதிமன்றத்தால் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை செய்து மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்றச் செயல்கள் தொடர்பிலேயே குறித்த நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்பாக பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நேற்று (22) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles