NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொலையில் முடிந்த காதல் – யாழில் சம்பவம்… !

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி நீராடச் செல்வாதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற யுவதியை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில் 55 வயதுடைய நபர் ஒருவருடன், குறித்த 19 வயது யுவதிக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதன்படி, இருவரும் நேற்று ஊருக்கு வந்தவேளை குடும்பஸ்தர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles