NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றப்படும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கமைய, அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்றுவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரப் பகுதி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிப் பாதைகள் மற்றும் பக்கவாட்டு வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையே வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர்,

இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்இ நகர அபிவிருத்தி அதிகார சபைஇ நீர்ப்பாசனத் திணைக்களம்இ மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 07 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது எனவும், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை குறைக்கும் திட்டம் 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

Share:

Related Articles