NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் 6ஆவது வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் 6ஆவது வாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்தில் இரும்பு திருட வந்த இருவரிடம் விசாரணை நடத்துவதற்காக கிராம மக்கள் குழுவொன்று அங்கு வந்த போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கச் சென்ற நபரை மற்றுமொரு அதிகாரி சுட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles