NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோடரியால் மாமனாரை தாக்கி கொன்ற மருமகன் – வவுனியாவில் கோரம்

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles