NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபரே அவரது வீட்டின் மலசல கூடத்தில் எரிகாயங்ஙளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும், அவரை தேடி நேற்று (16) வீட்டிற்கு சென்ற நபரே, ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அவதானித்த நிலையில் அயலவர்களுடன் இணைந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை குறித்த ஆசிரியரின் மனைவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலசல கூடத்தில் வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles