NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத மதுபான உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திறப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் தங்கியிருந்த வீட்டில், சட்டவிரோதமாகக் காய்ச்சப்பட்ட மதுபானம், எரிவாயு அடுப்பு, பீப்பாய், அதைக் காய்ச்ச பயன்படுத்திய செப்புச் சுருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles