NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சதொச ஊடாக இறக்குமதி.

பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியாவில் இருந்து, லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்றுமதிக்கான தடையை நீக்க தீர்மானித்த இந்திய அரசாங்கம், அதற்கு முதற் கட்டமாக இலங்கைக்கு 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளது. வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா? அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா? என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு கலந்துரையாடியதுடன், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 2 வாரங்களில் முதல் கையிருப்பாக 2,000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் தேவைப்படுகின்ற பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles