நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சமீபத்திய மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வைத்தியர் – நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என குறிப்பிட்ட அமைச்சர், தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.