சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்பற்கு, சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது.
இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு சுப்பையா என்ற நபருக்கு எதிர்வரும் 26ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அத்துடன், தண்டனை கைதியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.