NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவனொளிபாத மலைக்கு செல்ல தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிவனொளிபாத மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார் .

இந்த நாட்களில் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் படிகளில் இருந்து பாரியளவில் நீர் பாய்ந்து வருகிறது.

அவ்வாறு செல்லவேண்டுமானால் அந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் வசிப்பிடத்தை கிராம அதிகாரிக்கு அறிவித்து, பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை கொண்டு வர வேண்டும். 

குறித்த கடிதம் இரத்தினபுரி மற்றும் நல்லதண்ணி பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் சிவனொளிபாத மலைக்கு வழிபட செல்ல அனுமதி வழங்கப்பட்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles