NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்குப் பூட்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் நேற்று (14) முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மொரவக கல்வி வலயத்திற்குட்பட்ட மொரவக்க மற்றும் கொட்டபொல பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக மொரவக்க (தெனிய) கல்வி வலய அலுவலகம் அறிவித்துள்ளது.

அனர்த்த நிலைமை காரணமாக மொரவக கல்வி வலயத்திற்கு (தெனிய) உட்பட்ட பஸ்கொட பிரதேசத்தில் ஊருபொக்க தேசிய பாடசாலை மற்றும் பட்டிவெல கனிது பாடசாலை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்படும் என மொரவக (தெனிய) வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles