NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு





சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றில் இரண்டு நாட்கள் இடம்பெற்றிருந்தது.  

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சராக தொடரும் வாய்ப்பை கெஹேலிய ரம்புக்வெல்ல பெற்றுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.



Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles