NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுனாமியின் போது தப்பிச்சென்ற மரண தண்டனை கைதி 19 வருடங்களின் பின்னர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2004ஆம் ஆண்டு சுனாமி இயற்கை அனர்த்தம் நிகழ்ந்த போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருட காலத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு அவரை கொண்டு செல்லப்பட்ட போது அவர் தப்பிச் சென்றுள்ளார். சந்தேகநபர் இல்லாமல் நடத்தப்பட்ட வழக்கில், 2012ஆம் ஆண்டு மே மாதம் சந்தேகநபரின் சகோதரர் விடுவிக்கப்பட்ட நிலையில், காணாமல்போன சந்தேக நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

எவ்வாறாயினும், தற்போது 54 வயதான சந்தேக நபர், ராகம நகரில் வைத்து நேற்று (14) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (15) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles