NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாராளுமன்ற விசேட குழு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் சில அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் திட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் விசாரணை நடத்துவது முக்கியம் என்று எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்ம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles