NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலி செய்திகளை வெளியிடுகின்றது – ரொஷான் ரணசிங்க

ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலியான செய்திகளை வெளியிடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்படும் பணத்திற்கு பேராசை பிடித்த சிலர் தமது அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் பணத்தை கொள்ளையிட்ட நபர்கள் அந்த பணத்தை பயன்படுத்தி தம்மை படுகொலை செய்ய கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்த கடிதங்கள் இலங்கை சட்டத்திற்கு முரணானது எனவும் நீதிமன்றத்தையும் பிழையாக வழி நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles