(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று (02) நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றம் தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப கட்சியின் யாப்பினை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.