NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜிம்பாப்வேயில் இலங்கை அணியுடன் இணையும் இளம் வீரர்கள் !

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை அணியுடன் மேலதிக வீரர்களாக மூவர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நடைபெற்றுமுடிந்த தென்னாபிரிக்க யு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரகாசித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்கஇ சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர்களான துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை குழாத்தின் வீரர்கள் உபாதைக்கு முகங்கொடுக்கும் பட்சத்தில்இ தேவை ஏற்படின் மேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களை அணியில் இணைத்துக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

டில்ஷான் மதுசங்கஇ சஹான் ஆராச்சிகே மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய இளம் வீரர்கள் மூவரும் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதுடன்இ எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) அணியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை அணி ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் அணியை எதிர்கொண்டு 175 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles