NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கச்சங்கிலியை அறுத்துச்சென்ற நபர்கள் – வவுனியாவில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வவுனியா – குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

வவுனியா – குருமன்காடு, காளிகோவிலுக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நபர்களை சிலர் துரத்திச்சென்றபோதும் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றயதினம் (03) நெளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த 5 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles