NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமாரை கோபுரத்தில் பெயரை பொறித்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில்..

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் தமது பெயர்களையும், வாக்கியங்களையும் பொறித்த சில பெண்களுக்கு பொலிஸாரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த சில பெண்கள், கோபுர சுற்று தளத்தில் வாக்கியங்களையும் பெயரையும் எழுதிக் கொண்டிருந்ததை நிர்வாகம் அவதானித்துள்ளது.

அவர்கள் எழுதிக்கொண்டிருந்தவை அங்குள்ள சிசிடிவ காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த குழுவினர் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அக்குழுவினர் நேற்று பிற்பகல் அங்கு வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles