தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியாகியதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
குருநாகலை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது பின்னால் வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, லொறியில் இருந்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில், இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுனர் .