NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தயாசிறி ஜயசேகர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரது தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரதி பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருக்கவில்லை.

இவ்வாறான ஒரு பின்னணியில் தயாசிறி ஜயசேகரரை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles