NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாயாருக்கு அறிவிக்கப்பட்டது சாந்தனின் மரணச்செய்தி…!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் மரணச் செய்தி அவரது தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி ஊடாக தாயாருக்கு மரணச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சாந்தனின் உடல் உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கடந்த முதலாம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மீள் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாந்தனின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சட்டத்தரணி புகழேந்தி பெரும் பங்காற்றியதுடன், அவரும் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

எவ்வாறாயினும், சாந்தனின் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த அவரின் தாயாருக்கு மகனின் மரணச் செய்தியை அறிவிக்காது தனிமையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் சாந்தனின் மரணச் செய்தி தாயாருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தாயாரின் மனநிலை காரணமாக சட்டத்தரணி ஊடாக மிகவும் பக்குவமாக மரணச் செய்தி எடுத்துச் சொல்லப்பட்டதாக அறியமுடிகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles