NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாயையும் மகளையும் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மஹரகம – பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி என்ற பெண் பிள்ளையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி முதல் தனது மனைவியும் மகளும் காணாமல் போயுள்ளதாக அப்பெண்ணின் கணவர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாம் 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும்; கணவர் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், தெமட்டகொடையில் வசிக்கும் தாயாரிடம் மனைவி மற்றும் மகள் குறித்து வினவிய போது, அவர்கள் அங்கும் வரவில்லை எனக் கணவர் அளித்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles