NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!



(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது.


தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (26) உத்தரவிட்டுள்ளார்.


அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.


நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles