NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரிபோஷா உணவுத்திட்டத்தை தொடர அமெரிக்கா ஆதரவு…!

உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷ வழங்க அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. 

திரிபோஷ உணவுத் திட்டத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக, 4,700 மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் மற்றும் சோளங்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையமானது ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின்(WFP)அமைப்பானது இலங்கையிலுள்ள திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் குறித்த மூலப்பொருட்கள் கையளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் (WFP) அமைப்பின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles