திருகோணமலையில் வீட்டு கூரையிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்குளம் பகுதியில் நேற்று (07) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரிய வந்துள்ளது.
மழை பெய்தமையினால் கூரை மேல் ஏரி கூரையை திருத்திக் கொண்டிருந்த போது தவறி விழுந்து கீழே விழுந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மேலும் மரணம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.