NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் முட்டை தட்டுப்பாடு தீரும் காலம் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

நாட்டின் முட்டை தட்டுப்பாடு டிசம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முட்டை தட்டுப்பாடு ஓரளவுக்கு தீரும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சராசரியாக வருடத்திற்கு சுமார் 85,000 தாய் விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அவற்றில் 50 சதவீதமானவையே கடந்த வருடம் (2022) இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவை நிதி நெருக்கடியினால் முக்கியமாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் இருந்து பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், தற்போது பலர் தாய் விலங்குகளை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

பறவைக் காய்ச்சல் காரணமாக, பிரேசில் மற்றும் நியூசிலாந்தில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை அனுமதிப்பதில்லை என்றும் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles