(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கட்சியைக் கட்டியெழுப்பும் சவாலுக்கும் நாட்டைப் பாதுகாக்கும் சவாலுக்கும் நாமல் ராஜபக்ஷ மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சவாலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்படும். இளம் அரசியல் தலைவருக்கு முதிர்ச்சியடைய இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எந்த தேர்தலுக்கும் தாம் தயார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலமான அரசியல் சக்தியாக பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.