NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் நாளைய தினம் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கம் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் சப்ரகமுவ, மேல்,மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஏனைய பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கன மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles