NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நேற்று (16) மாலை நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர், கடுவலை – வெலிவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையின் சுழியோடி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles