NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 9 தமிழக மீனவர்கள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று (25) அதிகாலை எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள்; 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியா – இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை 200 விசைப்படகுகளில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை சுற்றிவளைத்த போது, இரு விசைப்படகுகளை கைப்பற்றியதுடன் 9 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 8ஆம் திகதியன்று இந்திய எல்லையில் மீன்பிடித்த இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த 15 மீனவர்களை 9ஆம் திகதி அதிகாலையில் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தை அடிப்படையாக கொண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles