NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ள இந்திய பஸ் – 14 பேர் உயிரிழப்பு

நேபாளம் – தனாஹுன் (tanahun) மாவட்டத்தில் 40 பயணிகளுடன் பயணித்த பஸ் ஓன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (23) காலை குறித்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த 40 பேரில் 14 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் பஸ்ஸின் மீது பாறைகள் விழுந்ததால் குறித்த பஸ் வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles